” வெற்று அரசியல் எடுபடாது ” வைகோவை கண்டித்த தமிழிசை…!!

நேற்று திருப்பூரில் இருந்து  பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.இதையடுத்து மோடிக்கு கருப்பு கொடி போராட்டம் மற்றும் #gobackmodi போன்ற அனைத்து சாதாரணமாக நடைபெற்றது.மதிமுகவினர் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர்.

 

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக மாநில தலைவர் தமிழிசைசௌந்தர்ராஜன் பிரதமருக்கு பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மெடிக்கல் காலேஜ் வருகின்றது இதை எதிர்க்கிறார் வைகோ.  எதிர்க்கட்சியினர் எங்களின்  இளைஞரணி பெண்ணை ரோட்டில் போட்டு அடைத்துள்ளனர். எங்களை கண்டு எதிர்க்கட்சிகள்  பதற்றத்தோடு இருக்கிறார்கள் தமிழகத்தில் வெற்று அரசியல் எடுபடாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று வைகோவை தமிழிசை சாடினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment