ஆன்லைனிலும் மது விற்பனை செய்யக்கூடாது – வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

ஆன்லைனிலும் மது விற்பனை செய்யக்கூடாது என்ற  வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுப்ப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்தது தமிழக அரசு . அதன்படி, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக சமூக இடைவெளி பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் கொரோனா பரவும் என்றும் கருத்துகள் எழுந்தது . ஆனால் மக்கள் நீதி மய்யம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் , ஊரடங்கு உள்ளபோது மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை என கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டது.மேலும் ஆன்லைன் மூலம் மது விற்றுக்கொள்ளலாம் என கூறியது.பின்னர் உயர்நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டுள்ளது.மதுரை நுகர்வோர் அமைப்பு பொதுச்செயலாளர் சிங்கராஜ் என்பவர் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,சிங்கராஜ் தரப்பு வழக்கறிஞர் ஆன்லைன் மூலமாகவும் மதுவை விற்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இதன் பின் உயர்நீதிமன்றம்,தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கின் முடிவை பொறுத்து இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று விசாரணையை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது .