மக்களின் தவிப்பை தங்கள் அரசியல் பதவி தாகத்தை தீர்க்க திமுக, காங்கிரஸ்  பயன்டுத்துகின்றன- தமிழிசை

மக்களின் தவிப்பை தங்கள் அரசியல் பதவி தாகத்தை தீர்க்க திமுக, காங்கிரஸ்  பயன்டுத்துகின்றன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில்,தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை பற்றிபேச ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ துளிக்கூட உரிமையில்லை .மக்களின் தவிப்பை தங்கள் அரசியல் பதவி தாகத்தை தீர்க்க திமுக, காங்கிரஸ் பயன்டுத்துகின்றன.சென்னையை சிங்கப்பூர் ஆக்குவதாக சொன்ன ஸ்டாலின் அவர்களே! வீராணம் குழாயில் ஊழல், சென்னையை சுற்றிலும் ஏரிகுளங்கள் காணாமல் போனதும் ஆற்று மணல் கொள்ளை போனதும் திமுக ஆட்சி காலத்தில்தானே.சென்னை குடிநீர் பிரச்சனைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.