2ஜி ஊழல் மேல்முறையீட்டு வழக்கு: கனிமொழி, ஆ.ராசா உட்பட 19 பேருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 2ஜி வழக்கிலிருந்து கனிமொழி, ஆ.ராசா உட்பட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மேலும் 2ஜி அலைக்கற்றை தனியார் நிறுவங்களுக்கு அளித்த ஒதுக்கீட்டில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில்,திமுகவின் கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 200 கோடி ரூபாய் தந்ததாக தெரிவித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி, குற்றம் சுமத்தப்பட்ட கனிமொழி, ஆ.ராசா உட்பட 19 பேரையும் விடுவித்தது.

இந்நிலையில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மத்திய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 19 மற்றம் 20ம் தேதிகளில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள், டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.பி கர்க் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ஆ.ராசா உட்பட 19 பேருக்கும் விளக்கம் அளிக்கும் படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை மே 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment