இறந்த போன நபர்போல் ஆள்மாறாட்டம்..! ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலம் திருட்டு..!

  • சென்னையில் இறந்த நபர் உயிரோடு இருப்பது போல் ஆள்மாறாட்டம் செய்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு.
  • பெண் உட்பட 3 பேரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை சேர்ந்த பெருமாள் கடந்த 2009-ம் ஆண்டில் இறந்தார். அவருக்கு சொந்தமாக 1035 சதுர அடி நிலம் நந்தம்பாக்கத்தில் இருக்கிறது. இந்நிலையில் வேறொரு நபரை இவர் தான் பெருமாள் என ஆள்மாறாட்டம் செய்து கடந்த 2013-ல் அவரிடம் இருந்த அந்த நிலத்தை வாங்கியது போல ரகுக்குமார் என்பவர் போலி ஆவணங்களை தயார்ப்படுத்தி அபகரித்துள்ளார்.

பின்னர் அந்த இடத்தை ரகுக்குமாரின் மனைவி ஜெயக்குமாரி பெயரில் பத்திர பதிவு செய்தது அறியப்பட்டது. அதன் பின் நிலத்திற்கு சொந்தகாரரான பெருமாளின் மகன் கோபி என்பவர் போலீசிடம் புகார் கொடுத்தார். அதனை மத்திய குற்றப்பிரிவில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த மோசடியில் ரவிக்குமாரும் அவரது மனைவி ஜெயக்குமாரி மற்றும் உடந்தையாக செயல்பட்ட போத்திராஜ் ஆகியோரை போலீசார் கைது சேந்தனர். பின்னர் அந்த அபகரிப்பில் மற்றொரு நபரான சரவணன் தலைமறைவாக உள்ளதால் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்