திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக பலத்த மழை…!

திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் 2 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மாலத்தீவு பகுதியில் காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில்  திண்டுக்கல் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் 2மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

Leave a Comment