சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா உறுதி : ஒருவர் பலி

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்து தற்போது இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் 7,99,741 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,721 பேர் பலியாகியுள்ளனர். 1,69,995 பேர் குணமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், இயல்பு நிலை திரும்பி வரும் சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஒருவர் பலியாகியுள்ளார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,305 ஆக உயர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,518 அதிகரித்துள்ளது. 2,000க்கும் அதிகமானவர்கள் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே 76 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸிலிருந்து சீனா படிப்படியாக மீண்டு இயல்பு நிலைக்கு வந்துள்ளது. அங்கு தற்போது ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்