கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி!

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி.

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மனிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சித்தராமையா தன்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் சுயதனிமையில் இருக்குமாறு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘எனக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக மருத்துவர்கள் ஆலோசனையின் படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவக்ரள் அனைவரும் கரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்டு சுயதனிமையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.’ என  பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.