காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சிறப்பு கண்காணிப்பு குழு! சோனியாகாந்தி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு மென்னெச்செரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க ஓர் சிறப்பு குழு ஒன்றை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். 

இக்குழு மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் முக்கிய தலைவர்களான ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், தர்மத்வாஜ் சாகு, வீரப்ப மொய்லி ஆகியோர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.