கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் .

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான  டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் உள்ளிட்டோரின்  வீடுகளில்  வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்தது. மேலும் இது குறித்து  அமலாக்கத்துறையும்   வழக்குப் பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரியும், அமலாக்கத்துறையில் பதிவான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும்  இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது.

இதன்தொடர்ந்து  4 நாட்கள் அமலாக்கத்துறை சிவக்குமாரை  செய்து வந்த நிலையில் இன்று  அவரை கைது செய்தது.