சென்னையில் ஒரே நாளில் இரண்டு முக்கிய இடத்தில் குழந்தைகள் கடத்தல்! தேடுதல் வேட்டையில் போலீசார்!

  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அசாம்  சேர்ந்த 2 வயது ரக்ஷிதா எனும் பெண் குழந்தை கடத்தப்பட்டது. 
  • சென்னை அரசு மருத்துவமனையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 8 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

சென்னையில் ஓரே நாளில் இரண்டு வெவ்வேறு முக்கிய இடங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை உண்டாகியுள்ளது. முதலில் அசாம் மாநிலத்தில் இருந்து பார்ஸீனா என்கிற பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னை வந்துள்ளார். உடன் அவரது நண்பர் ஒருவரும் வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலையில் வந்திறங்கிய அவர்கள் ரயில்நிலையயில் குழந்தைகளுடன் படுத்துறங்கியுள்ளனர்.

பின்னர் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்க்கும் போது, 2 வயது நிரம்பிய ரக்ஷிதா என்கிற பெண் குழந்தையை மட்டும் காணவில்லை. உடனே பதறிப்போன அவர்கள் ரயில் நிலையத்தில் தேடி பார்த்துவிட்டு, பின்னர், ரயில்நிலைய போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

அதேபோல, சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்துவந்த ஜானி – நந்தேஷா தம்பதியினர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. அவர்களிடம் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் அந்த 8 மாத ஆண்குழந்தையை நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். நம்பி அந்த இளம் பெண்ணுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளார்.

குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் என கூறி மருத்துவமனைக்கு கூட்டி சென்ற அவர், அந்த  8 மாத குழந்தையுடன் தப்பித்து விட்டார். அதன் பின்னர் அந்த பெண்ணையும், குழந்தையும் தம்பதியினர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தேடி பார்த்துள்ளனர். ஆனால், குழந்தையுடன் அந்த இளம் பெண் தப்பித்துவிட்டார்.

இச்சம்பவம் குறித்தும் மஹாராஷ்டிரா தம்பதியினர் போலீசில் புகாரளித்துள்ளனர். ஒரே நாளில் சென்னையில் இருவேறு முக்கிய இடங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளது சென்னை மக்களிடையே அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.