புலி ,சிங்க குட்டிகளுக்கு பெயர் சூட்டிய -முதலமைச்சர் !

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்த 3 சிங்கக்குட்டிகளுக்கும் , 4 புலிக்குட்டிகளுக்கும் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்.

அதன் படி  ஒரு  ஆண் சிங்கக்குட்டிக்கு  பிரதீப் என்றும் , 2 பெண் சிங்கக்குட்டிகளுக்கு நிரஞ்சனா , தக்சனா என பெயர் வைத்தார். மேலும் 2 ஆண் புலிக்குட்டிகளுக்கு மித்ரன் , ரித்விக் எனவும் ,2 பெண் புலிக்குட்டிகளுக்கு யுகா , வெண்மதி என பெயர் சூட்டினார்.

இதை தொடர்ந்து ஐதராபாத்தில் இருந்து வண்டலூருக்கு கொண்டு வந்த காண்டாமிருகத்திற்கு ராம் என பெயர் வைத்து காண்டாமிருகம் வைத்து உள்ள பகுதியை பொதுமக்கள் பார்வைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

author avatar
murugan