பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபலங்கள் மீண்டும் ஒரே நிகழ்வில் சந்திப்பு!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன், ரேஷ்மா, சாக்ஷி, மதுமிதா, அபிராமி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வளாகமொன்றில், பேஷன் ஷோ நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சாக்ஷி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில், ப.ரஞ்சிதா அவர்களின் மனைவியான அனிதா உருவாக்கிய புதிய ஆடையை சாக்ஷி அணிந்து, இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.