காஷ்மீர் விவகாரத்தில் ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசி வருகிறார்-ஓ.எஸ்.மணியன்

நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழக போலீசார் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதில் முழு கவனத்துடன் திறமையாக செயல்படுவார்கள் .எனவே தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. காஷ்மீர் விவகாரத்தில், பாதுகாப்பிற்காக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை, எதிர்கட்சிகள் ஏற்று  நடந்து கொள்ள வேண்டும்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பான போராட்டம் குறித்து ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசி வருகிறார். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற முறையில் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் .காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை திமுகவினர் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்  என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  தெரிவித்துள்ளார்.