இடைத்தேர்தல் முடிவுகள்..! விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக முன்னிலை..!

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்கு எண்ணிக்கை 8 மணி முதல் 8.30 வரை எண்ணப்படும்.
விக்கிரவாண்டியில் தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்ற நிலையில் , விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் முன்னிலையில்  உள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தியை விட முத்தமிழ்செல்வன் முன்னிலையில்  உள்ளார்.
நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் விட  அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் முன்னிலையில்  உள்ளார்.

author avatar
murugan