பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி!இலவச அழைப்புகளை நிறுத்துகிறது பிஎஸ்என்எல்……….

தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோவின் வருகையால் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது.
இந்நிலையில்  இரவு 9 மணிக்கு மேலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் இலவச அழைப்புகள் திட்டத்தை பி.எஸ்.என்.எல். கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த மாத மத்தியில் இரவு நேர இலவச அழைப்புகளுக்கான நேரம் 9 மணியில் இருந்து 10.30 மணியாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமைக்கான இலவச அழைப்புகளை திரும்பப் பெற பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது. புதிய திட்டம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் புதிய மாறுதல்கள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதனால் தங்கள் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் புதிய திட்டங்களை ஆலோசித்து வருவதாக கொல்கதா பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் …..

Leave a Comment