Breaking News:காமன்வெல்த் போட்டியில் மகளிர் டி-20 கிரிக்கெட் சேர்ப்பு !

இங்கிலாந்தில்  உள்ள பர்மிங்காமில்  2022-ம் ஆண்டு  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெறும். மேலும் 18 விளையாட்டுகளில் 4,500  மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியிடு  உள்ளனர்.

இந்நிலையில் 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மகளிர் டி 20 போட்டி சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் 1998- ம் ஆண்டு  கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் கடைசியாக விளையாடியது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி  வென்றது.

தற்போது மீண்டும்  காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் டி 20 போட்டி சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்காக ஐசிசி , இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய முயற்சியால் காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு அனுமதித்து உள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிர் 20-20 சேர்க்கப்பட்டதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதிப்படுத்தி உள்ளது.

author avatar
murugan