biggboss 3: அப்ப பொய் சொல்றனா! மீண்டும் பிக்பாஸ் வீட்டில் தனது ஆட்டத்தை அரங்கேற்றும் வனிதா! கதறி அழும் ஷெரின்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் தர்சன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வனிதா அவர்கள் பேசுகையில், தர்சன் வெளியே போனதற்கு ஷெரின் தான் கரணம் எனக் கூறுகிறார்.
வனிதாவின் இந்த பேச்சை எதிர்த்து சாக்ஷி குரல் கொடுக்கிறார். வனிதாவின் இந்த பேச்சால் ஷெரின் கதறி அழுகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.