biggboss 3 : பிக்பாஸ் வீட்டிற்குள் மோதலில் முடியும் காதல்! நடந்தது என்ன? நடக்க போவது என்ன?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், இதுவரை கலந்து கொண்ட 16 பிரபலங்களில்  பாத்திமா பாபு மற்றும் வனிதா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் கவினுக்கும், சாக்ஷிக்கும் பிரச்னை எழுந்தது. இந்த பிரச்னை தற்போது லொஸ்லியா பக்கம் திரும்பியுள்ளது. மேலும் நான் செய்தது தப்பு தான் என்பதை கவின் ஒத்துக் கொள்வதாகவும், எனக்கு எப்போதுமே நண்பர்கள் தான் முக்கியம் என்ற கருத்தையும் முன் வைத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.