ஆலியா தனது குழந்தை புகைப்படத்தை முதன் முறையாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் மானாட மயிலாட எனும் நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, ராஜா ராணி எனும் தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் ஆலியா மானசா.
தொடரில் நடித்ததற்கு பிறகு அத்தொடரின் கதாநாயகன் சஞ்சீவையே திருமணமும் செய்துகொண்டார். இவருக்கு அழகிய ஆண் குழந்தை அண்மையில் பிறந்தது. ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் பாலோயர்ஸ் வந்ததும் குழந்தையை காண்பிப்போம் என ஆலியா கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்றோடு அவருக்கு 2 மில்லியன் பாலோயர்ஸ் வந்ததால் தனது குழந்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,