மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் ..!பதிலடி தரப்படும் -மாணவர் அமைப்பு தலைவர் தகவல்

  • டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  நேற்று மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது.
  • பதிலடி தரப்படும் என்று மாணவர் அமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார். 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த மாதத்தில் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர் .

நேற்று பேராசிரியர்கள் சங்கம் சார்பாக பல்கலைக்கழகத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் .கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது முகமூடி கட்டிக் கொண்டு வந்த சிலர் கடுமையான ஆயுதங்களை வைத்துக் கொண்டு தாக்கினர்.இந்த தாக்குதலில் இடதுசாரி மாணவர் அமைப்பின் தலைவர் ஆய்ஷி கோஸ் கடுமையாக தாக்கப்பட்டு மண்டை உடைந்தது.

இந்த தாக்குதலுக்கு ஆர்எஸ்எஸ் சார்பு ஏபிவிபி மாணவர் அமைப்பு இருப்பதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை குற்றம் சாட்டியது.அந்த முகமூடி அணிந்த கும்பல் வளாகத்திற்குள் இரவு 9 மணி வரை இருந்தனர்.அவர்கள் கையில் ஹாக்கி மட்டை ,இரும்பு கம்பி செங்கல்களை கொண்டு கண்ணில் படும் பொருட்கள் அடித்து விடுதியை சூறையாடினர்.இந்த தாக்குதலில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் காயமைடந்த 28-க்கும் மேற்பட்டவர்கள்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்த தாக்குதலுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் டெல்லி காவல் தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். டெல்லி ஜே.என்.யு பல்கலை கழகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பல இடங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் .

இந்நிலையில் இன்று இது குறித்து மாணவர் சங்கத்தலைவர்  ஆய்ஷி கோஸ்  கூறுகையில், இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் .ஜேஎன்யூ-வில் ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்புகளை சேர்ந்தவர்கள்தான் தாக்குதல் நடத்தினார்கள்.சபர்மதி விடுதியில் போராடத்தயாராக இருந்தபோது தாக்குதல் நடந்தது. தாக்குதலின் போது பெயரைச் சொல்லியே தாக்குதல் நடத்தினர். காவலாளிகளுக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது.பல்கலைக்கழக துணைவேந்தரை பணிநீக்கம் செய்யவேண்டும்.மாணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு இரும்புக் கம்பிக்கும் விவாதம் மற்றும் கலந்துரையாடல் மூலம் பதிலடி தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.