ஆசியாவின் மிகப்பெரிய சோலார் திட்டம்! ஒரே வார்த்தையில் ட்வீட் செய்த ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அசத்யாகிராஹி’ என ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

ஆசியாவில் மிகப்பெரிய சோலார் திட்டம் என கூறி மத்திய பிரதேசத்தில் ரேவா அல்ட்ரா மெகா சோலார் திட்டத்தினை பயன்பாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 750 மெகாவாட் மின்சார உற்பத்தியை சூரிய ஒளியிலிருந்த பெற முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அசத்யாகிராஹி’ என ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார். இதற்கு, ‘சத்தியத்திற்கான போராட்டத்தை நம்பாத ஒருவர்’ என்று பொருள்படும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.