அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை எம்.பி ஆகிறார் அன்புமணி ராமதாஸ் !

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் மாநிலங்களை  உறுப்பினர் ஆகிறார். இந்த அறிவிப்பை பாமக மாநில தலைவர் ஜி .கே மணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் கூட்டணியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாமக விற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில், அதிமுக விற்கு இருந்த 3 இடங்களில் 2 இடங்களில் அதிமுக வேட்பாளர்களும் மீதி இருக்கும் ஒரு இடம் பாமக விற்கு வழங்கியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட பாமக 6 இடங்களிலும் பெரும் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.