ஆளுநர் தமிழிசையின் பாதுகாவலர் ஏழைகளுக்காக இலவச முகக்கவசம் தயாரிக்கிறார்.!

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வருகையில் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பல்வேறு பகுதிகளில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கபடுகிறது.
இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்யா ராஜன் அவர்களின் பாதுகாவலர்களில் ஒருவரான அமரேஸ்வரி என்பவர் தனது பணிநேரம் முடிந்து மீதி நேரங்களில் வீட்டில் முகக்கவசம் தயாரித்து முகக்கவசம் வாங்கமுடியாத நபர்களுக்கு அதன் அத்தியாவசியத்தை உணர்த்தி முகக்கவசம் கொடுத்து வருகிறார். கொரோனா பரவல் தடுப்புக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் இந்த பெண் பாதுகாவலருக்கு  பாராட்டுக்கள் வந்தவண்ணம் இருக்கிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.