தோல்விகள் எல்லாம் வருங்கால  ஆய்வில் இடம்பெறும் -ராகுல் காந்தி

கொரோனா, பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்திய தோல்விகள் வருங்கால  ஆய்வில் இடம்பெறும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆனாலும் இந்தியாவில் பாதிப்பு அதிகமாகி வருகிறது.

அரசின் நடவடிக்கைகளை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி,   ‘ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்’ வருங்கால  ஆய்வில் கொரோனா, பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்திய விதம், இடம்பெறும்  என்று தெரிவித்துள்ளார்.கொரோனாவுக்கு எதிரான போரை விரைவில்  வெல்வோம் என்று கூறிய  பிரதமரின் வீடியோவை பதிவிட்டுள்ளார்.