ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பாக். பிரதமரின் அழைப்பை ஏற்க மறுப்பு !

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பாக்கிஸ்தான் பிரதமரின் அழைப்பை ஏற்க மறுத்துள்ளார்.
காபூலில் கடந்த வாரம் அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி இருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 95 பேர் பலியானதற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் சாஹித் ககான் அப்பாஸி (Shahid Khaqan Abbasi), ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
ஆனால், பாகிஸ்தான் பிரதமரது தொலைபேசி அழைப்பை ஏற்க ஆப்கான் அதிபர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment