அறக்கட்டளை மூலம் மக்களுக்கு உதவிய நடிகர் விஷால்!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அறக்கட்டளை மூலம் உதவிய நடிகர் விஷால்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால், இந்தியா முழுவதும் மாக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால், வேலையின்றி தவிக்கும் மக்கள், ஒரு வேலை உணவுக்கு கூட வழியில்லாமல் பலர் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பிரபலங்கள் பலரும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகிற நிலையில், நடிகர் விஷால் தன் அம்மாவின் தேவி அறக்கட்டளை மூலம் நலிவுற்ற நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.