பருவமழை காலத்திற்கு முன்பாக அனைத்து மின் கம்பங்களும் சரி செய்ய நடவடிக்கை-அமைச்சர் தங்கமணி

பருவமழை காலத்திற்கு முன்பாக அனைத்து மின் கம்பங்களும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்  என்று மின்சாரத்துறை  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துறை  அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,சென்னை சிட்லப்பாக்கத்தில் சேதுராஜன், மின்கம்பம் பழுதானதால் தான் உயிரிழந்தார் என்பது தவறான தகவல் ஆகும் .மின்சார வாரியம் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த மின்கம்பம் பழுதடைந்த தாக எந்த புகாரும் கிடையாது.மின்கம்பத்தின் மீது லாரி மோதியதால் தான் மின்கம்பம் பழுது ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் சிசி டிவி ஆதாரங்களை தேடி வருகிறோம். விரைவில் லாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பருவமழை காலத்திற்கு முன்பாக அனைத்து மின் கம்பங்களும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மின் துறை ஊழியர்கள் சேவைகளுக்கு பணம் கேட்டால் உடனடியாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.