9,000,00,00,000 கடன் பெற்று ஓடியவரின் சொகுசு வாழ்கை..!!

லண்டன் ,

13 பொதுத்துறை வங்கிகளிலிருந்து 9,000 கோடி ரூபாய்க் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தேடப்படும் குற்றவாளியாக மாறி தலைமறைவாகினார் விஜய் மல்லையா .இவரின் இவரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்த இது தொடர்பாக வழக்குப் பதிந்து சிபிஐ விசாரித்து வருகிறது. லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர போலீஸ் முனைப்பு காட்டி லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் முறையிட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் எனத் தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க, அமலாக்கத்துறையினர் மல்லையாவின் சொத்துக்களை முடங்கியுள்ளது. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட அவரின் பல்வேறு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. கைது, வழக்கு, சொத்துகள் முடக்கம் என இப்படி நாலாபுறமும் நெருக்கடியில் சிக்கித்தவித்து வந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் ஹாயாக ஊர் சுற்றி வருகிறார் மல்லையா.

DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment