4-வது ஒரு நாள் போட்டி:ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி!!தொடருமா இந்திய அணியின் வெற்றி

நாளைய போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது.

3 -வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக விக்கெட் கீப்பர் தோனி அணியில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார்.அதேபோல் விஜய் சங்கர் நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் 243 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 93 ரன்கள் அடித்தார்.இந்தியாவின் பந்துவீச்சில் சமி 3, சாஹல்,புவனேஸ்வர் குமார் ,பாண்டியா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.இதனால் இந்திய அணிக்கு 244 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதன் பின் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 43 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 245 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இந்திய அணி வீரர் ரோகித் சர்மா 62 ரன்கள் குவித்தார்.இந்திய வீரர்கள் அம்பத்தி ராயிடு 40* தினேஷ் கார்த்திக் 38* இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் 4 -வது ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டன் நகரில்  நடைபெறுகிறது.தொடர்ந்து ஓய்வு இல்லாமல் ஆடிவரும் விராட் கோலிக்கு கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளது பிசிசிஐ.எனவே  நாளைய போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது.

Leave a Comment