சீன அதிபரின் அழைப்பை ஏற்று சீனா செல்கிறார் பிரதமர் மோடி-வெளியுறவுத்துறை செயலாளர் கோகலே

சீன அதிபரின் அழைப்பை ஏற்று சீனா செல்கிறார் பிரதமர் மோடி  என்று வெளியுறவுத்துறை செயலாளர் கோகலே தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழகம் வந்தார்.நேற்றும் இன்றும்  பிரதமர் நரேந்திர மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது.இந்த நிலையில் சந்திப்பு குறித்து செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவுத்துறை செயலாளர் கோகலே கூறுகையில்,அடுத்த ஆண்டு சீனாவுக்கு வர அதிபர் ஷி ஜின்பிங் முன்வைத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார். இதனால் சீன அதிபரின் அழைப்பை ஏற்று சீனா செல்கிறார் பிரதமர் மோடி .