2011-ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற நட்சத்திர வீரருக்கு சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு…!

இந்திய அணியில் 2011ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற அணியில்  இடம்பெற்ற வீரர் ஒருவரின், மேட்ச் பிக்சிங் கும்பல் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போல ஆர்பிஎல் என்பது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் விளையாடும் டி20 கிரிக்கெட் போட்டியாகும். இந்த போட்டிகள் தொடர்பாக மேட்ச் பிக்சிங் புகார்கள் எழுந்து, 6 உள்ளூர் வீரர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது ராஜஸ்தான் போலீசாரால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆர்பிஎல் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீரர் டெஸ்ட், 50 ஓவர், 20 ஓவர் ஆகிய 3 போட்டிகளிலும் விளையாடியவர் என்றும், 2011ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவர்என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment