புத்தாண்டு கொண்டாட்டம்…!சென்னையில் 15 ஆயிரம் போலீசார்கள் குவிப்பு …! குடித்துவிட்டு வாகனம் ஓட் டினால் உரிமம் ரத்து…!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று  சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக  சென்னை காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், மயிலாப்பூர், கீழ்பாக்கம், அடையாறு, மாதவரம் உள்ளிட்ட 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது .மெரினா, சாந்தோம், காமராஜர் சாலைகளில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும் .
Related image
இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக 20 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வதோடு , குற்ற ஆவண காப்பகத்தில் தகவல்கள் சேகரிக்கப்படும்.
அவ்வாறு சேகரிக்கப்படுவதால், பாஸ்போர்ட், விசா சரிபார்ப்பின் போது தடையில்லா சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment