தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி-62 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்த படத்தில் ராஜா ராணி சீரியல் புகழ் வைஷாலியும் நடித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் மகிழ்ச்சியுடன் சில தகவல்களை கூறியுள்ளார்.
நான் நடித்து முடித்ததும் தளபதி விஜய் என்னிடம் நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் என பாராட்டி இருந்தார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. அதன் பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் என்னை பாராட்டி இருந்தார் என கூறியுள்ளார்.