ரொனால்டோவுடன் புகைப்படம் எடுக்க முடியாததால் ஆழத்தொடங்கிய சிறுவன்!

கால்பந்து வீரர் ரொனால்டோ தன்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க முடியாததால் ஆழத்தொடங்கிய சிறுவனை அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோ தனது சக வீரர்களுடன் விமான நிலையம் செல்ல, தங்களுக்கான பிரத்யேக பேருந்துக்குள் சென்றுள்ளார். அப்போது, அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க விரும்பிய சிறுவன் ஒருவன் பேருந்தின் அருகே அழுதபடி நின்றிருந்தான்.

இதனை அறிந்த ரொனால்டோ அச்சிறுவனை அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், சிறுவன் அணிந்திருந்த உடையில் ஆட்டோகிராஃப்பும் போட்டு தந்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment