ரத்தன் டாடா திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வழிபாடு!

 
டாடா குழுமத்தின் முன்னால் தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் .
திருப்பதியில் திருமலை தேவஸ்தானத்துடன் இணைந்து ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி, வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.
பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பதியில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த வாய்ப்பு தங்களுக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுவதாகவும் அவர் கூறினார்.
source: dinasuvadu.com

Leave a Comment