மறைவுக்கு பின்னும் மதிக்கப்படும் மாமனிதர் டாக்டர் A.P.J. அப்துல்கலாம்..!!

மறைவுக்கு பின்னும் வாழ்ந்து வரும் இளைஞர் எழுச்சி நாயகன் டாக்டர் A.P.J. அப்துல்கலாம் அவர்களின் புகழ் மரியாதையை சொல்ல இயலாது.

  • பீகார் மாநிலம் பாட்டனாவில்  கிஷான்கஞ்சில் உள்ள வேளாண் கல்லுாரி மற்றும் அறிவியல் நகரத்துக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.
  • அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதி வாசிப்பு நாளாக கொண்டாடப்படும் என்றுமகாராஷ்டிரா அரசு அறிவித்தது.
  •  உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.

அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று தமிழ்நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படும்.

  • ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை நாளான ஆகஸ்டு 15 ஆம் தேதியன்று அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலில் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது  வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.
  • புதுதில்லியில் உள்ள அவுரங்சீப் சாலைக்கு. பி. ஜெ. அப்துல் கலாம் சாலை எனப் பெயரிட்டு புதுதில்லி மாநகராட்சி ஆணையிட்டது.
  • ஆந்திர பிரதேச சட்டபேரவையில் இவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது.19ஆம் நூற்றாண்டின்  சிறந்த மனிதன் விவேகானந்தர்.
  • 20ஆம் நூற்றாண்டின்  ,சிறந்த மனிதர் காந்தி அடிகள்.
  • 21ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல் கலாம் அவர்கள் என்று புகழ் பாடப்பட்டது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment