போலீஸ் கெட்டப்பில் சுந்தர்.சி ..!!

வி.இஸட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்கும் இருட்டு என்கிற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது…
2016-ம் ஆண்டில் அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா ஆகிய படங்களில் நடித்த சுந்தர்.சி அதற்குப் பிறகு இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். அரண்மனை 2, கலகலப்பு 2 ஆகிய படங்களை இயக்கிய சுந்தர்.சி, அடுத்ததாக சிம்பு மற்றும் விஷால் ஆகியோர் நடிக்கும் இரு படங்களை இயக்கவுள்ளார். சிம்பு நடிக்கும் படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகும்.
அதன்பிறகு விஷால் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளார் சுந்தர்.சி. இந்நிலையில் வி.இஸட். துரை இயக்கும் இருட்டு என்கிற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் சுந்தர்.சி. இப்படத்துக்கு இசை – ஹிப்ஹாப் தமிழா. த்ரில்லர் வகைமைப் படமாக அமையவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
DINASUVADU
author avatar
Dinasuvadu desk

Leave a Comment