பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் டிடிவி தினகரன் வெளிநடப்பு. 

பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்துள்ளார்.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பின்வருமாறு பதிலளித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து: தனக்கு முதலமைச்சர் பதவி இல்லை என்பதற்காக தியானம் இருந்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம். எங்களால் கட்சிப் பதவியை பெற்றவர், தற்போது குடும்ப ஆட்சியை எதிர்ப்பதாக கூறுகிறார்எனக்கூறி விமர்சித்தார்.
அதேபோல் ஒருசில அமைச்சர்களின் சதியால் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டேன்.தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வு தேவையற்றது எனவும் கூறினார்.அதிமுகவில் என்னை துணைப் பொதுச்செயலாளராக பரிந்துரை செய்ததே அமைச்சர் தங்கமணி தான்எனவும் அவர் கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment