பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை!

 
அவரது தலைமையில் நடைபெற்ற வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில், வெளியுறவு செயலர் ஜெய்சங்கரும் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் சிறையில் உள்ள 70 வயதுக்கு மேலான இந்தியர்கள் மற்றும் இந்தியப் பெண்களை விடுவிக்கும் படி அந்நாட்டு தூதரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசிய அவர், எல்லை தாண்டிய பயங்கரவாதம், எல்லையில் தாக்குதலை நிறுத்தும் வரை, அந்நாட்டுடன் கிரிக்கெட் தொடர் கிடையாது என்றும், தீவிரவாதமும், கிரிக்கெட்டும் கை கோர்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.
source: dinasuvadu.com

Leave a Comment