பரிதாபத்தில் இந்திய அணி..!!

இன்று  இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக தவான் 127 ,ராயுடு 60 ரன்கள் அடித்தனர்.

285 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங் ஹாங்க் அணி விக்கெட் இழப்பின்றி 30.5 ஒவர்களுக்கு 156 ரன்கள் எடுத்துள்ளனர்.அந்த அணியின் நிஷாத்தான்105 பந்துகளில் 86 ரன்களும் , அன்ஷ்மன் ரத் 83 பந்துகளில் 61 ரன்கள்   எடுத்துள்ளார்.ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறி வருகிறார்கள்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment