சிறுமுகை சார்பில் ஜின்பிங் உருவத்துடன் பட்டுப் பொன்னாடை..!

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு சீன அதிபருக்கு சிறப்பக்கலை பற்றி மோடி விளக்கினார். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்நிலையில், நரேந்திர மோடி சீன அதிபர் ஜின்பிங்குக்கு தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியம் மற்றும் நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு ஆகிய இரண்டு பொருட்களை நினைவுப் பரிசாக வழங்கினார். அதுமட்டுமின்றி,  ஜின்பிங்குக்கு சிறுமுகை சார்பில் ஜின்பிங் உருவத்துடன் பட்டுப் பொன்னாடையும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
 

author avatar
Vidhusan