கிறிஸ்துமஸ் களத்தில் நானும் இறங்குகிறேன்! அதிரடியாக அறிவித்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்!!!

நவம்பர் இறுதியில் சூப்பர் ஸ்டாரின் 2.O படம் இறங்கி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதாலும், அடுத்து பொங்கலுக்கு ஜனவரி 10இல் தல அஜித்தின் விசுவாசம், அடுத்து பொங்கலுக்கு மீண்டும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படம் இறங்குவதாலும், மற்ற பட தயாரிப்பாளர்கள் என்ன செய்வதென தெரியாமல், டிசம்பர் 21இல் கிருஸ்த்துமஸ் தின விடுமுறையை கணக்கிட்டு கோலிவுட் முக்கிய ஹீரோக்கள் மோத உள்ளனர்.
டிசம்பர் 20ஆம் தேதி விஜய் சேதுபதியின் சீதக்காதி படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து டிசம்பர் 21இல் தான் ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், தனுஷின் மாரி 2 என போட்டி இந்த நான்கு படங்களுக்கு இடையில் பலமாக உள்ளது.
இது போதாது என்று, நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரித்த முதல் படமான கனா திரைப்படத்தையும் அதே தேதியில் களமிறக்க முடிவு செய்து விட்டார். இத்திரிப்பிடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த 5 படங்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் எப்படி தியேட்டர் ஒதுக்க போகிறார்கள் என தெரியவில்லை.
source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment