கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த திரைப்பம் ‘விஸ்வரூபம்’. இப்படம் பல பிரச்சனைகளை தாண்டி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகியும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆக ஒரு வாரம் ஆகியும் வெளியானதில் இருந்து ரசிகர்களை கவர்ந்தது.மேலும் வசூலிலும் சக்கை போடு போட்டது .
இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகமான “விஸ்வரூபம் 2” இன்னும் ஒரு வாரத்தில் அதன் இறுதிகட்ட பாடல் படபிடிப்பு சென்னையில் முடிந்ததும் இப்படத்திற்கான ப்ரோமோசன் வேலைகள் துவங்குமாம் .
மேலும் இப்படமானது வரும் 2018 ஆண்டு பிப்ரவரி 25இல் வெளியாகும் என அதிகார்பபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் முதல் பாகத்தில் வெளிவந்த “நான் யார் என்று தெரிகிறதா “எனத்தொடங்கும் பாடல் எப்படி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோ அதே போன்று இந்த பாகத்தில் உள்ள “நியாபகம் வருகிறதா ” எனத்துவங்கும் பாடலும் ரசிகர்கள் மனதை வருடும் என சவால் விடுகிறார் இசையமைப்பாளர் கிப்ரான்.. மொத்தமாக நான்கு பாடல்கள் உள்ளதாம்……