ஆடி காருக்கு பதிலாக ஆம்புலன்ஸை ஓட்டி சென்ற போதை ஆசாமி

சென்னை : மதுரவாயலில் நிக்கில்சன் என்பவர் தனது உறவினர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்.

அனுமதித்து விட்டு வீட்டுக்கு திரும்புகையில் தான் கொண்டு வந்த ஆடி சொகுசு காரை  மறந்துவிட்டு அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்சை ஓட்டி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றவுடன்தான் மனைவி பார்த்து அதிர்ச்சியாகி பின்னர் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment