கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று..!-மொத்த எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு..!

கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் மேலும் 5 பேருக்கு புதிதாக ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட ஐந்து பேரில், இரண்டு பேர் அனயரா பகுதியை சேர்ந்தவர்கள். குன்னுகுஷி, பட்டோம் மற்றும் கிழக்கு கோட்டை பகுதிகளில் தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், தற்போது சிகிச்சையில் 8 பேர் மட்டுமே உள்ளனர். அதில் மூன்று பேர் கர்ப்பிணி பெண்கள். இந்த ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பில் முதல் நோயாளியும் அடுத்த 13 சுகாதார ஊழியர்களும் அனயாராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அனயாராவின் மூன்று கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் ஒரு கொத்து ஜிகா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் மற்ற இடங்களில் கொசுக்கள் பரவுவதைத் தடுக்க இப்பகுதியில் உள்ள கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஜிகா வைரஸ் தொற்று குறித்து மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். ஜிகா வைரஸுக்கு எதிராக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் திருவனந்தபுரத்தின் மற்ற பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் கூறினார்.

வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு அருகிலேயே கொசுக்களின் இனப்பெருக்கம் நடைபெறும் வகையில் இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது குறித்தும் அவர் கூறியுள்ளார்.