உயிரணுக்களிலிருந்து நீங்கும் எச்.ஐ.வி? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

HIV bareakthrough

HIV: எச்.ஐ.வி நோய்த்தொற்றுடைய உயிரணுக்களில் இருந்து எச்.ஐ.வியின் தடயைத்தை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர் நெதர்லாந்து விஞ்ஞானிகள். நெதர்லாந்து நாட்டின் மிக்பெரிய பல்கலைக்கழகமான ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, 2020-ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்ற Crispr-Cas என்கிற மரபணு-எடிட்டிங் நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் உயிரணுக்களில் இருந்து HIV-ஐ வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். READ MORE – மன்னர் சார்லஸ் இறக்கவில்லை… இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை! Crispr என்பது பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா போன்ற புரோகாரியோடிக் உயிரினங்களின் மரபணுக்களில் … Read more

சிக்குன்குனியாவிற்கு முதல் தடுப்பூசி… கிரீன் சிக்னல் கொடுத்த அமெரிக்கா ..!

சிக்குன்குனியா தடுப்பூசி: சிக்குன்குனியா வைரஸிற்கான உலகின் முதல் தடுப்பூசிக்கு அமெரிக்க சுகாதார அதிகாரிகள் நேற்று ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த தடுப்பூசி ஐரோப்பாவின் வால்னேவாவால் உருவாக்கப்பட்டது. இந்த தடுப்பூசி  “Ixchiq” என்ற பெயரில் விற்கப்படும். சிக்குன்குனியா வைரஸ் தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு சிக்குன்குனியா வைரஸின் அதிக ஆபத்தில் இருக்கும் போது அவர்களுக்கு  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Today, we approved the first chikungunya vaccine for individuals 18 years of age … Read more

36 மணி நேரத்தில் கிராமத்தில் இருந்து உலகிற்கு பரவும் வைரஸ்! சௌமியா சுவாமிநாதன் அதிர்ச்சி தகவல்!

இன்றை கால சூழலில் ஒரு வைரஸ் 36 மணி நேரத்தில் உலகிற்கு பரவிடும் என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி தகவல். இன்றைய நிலவரப்படி, ஒரு வைரஸானது தொலைதூர கிராமத்தில் இருந்து 36 மணி நேரத்திலேயே உலகம் முழுவதும் பரவும் நிலை உள்ளது என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். புவி வெப்பமடைதல், காடழிப்பு, நகரமயமாக்கல், காடு மற்றும் வீட்டு விலங்குகளின் தொடர்பு, … Read more

#MonkeyPox:ரேடாரின் கீழ் பரவக்கூடும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது. இந்நிலையில்,ஆப்பிரிக்க நாடுகளுக்கு அப்பால் நூற்றுக்கணக்கான குரங்கு பாக்ஸ் வழக்குகள் தோன்றியுள்ளதாகவும்,இந்த … Read more

அதிர்ச்சி…1-6 வரையிலான குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் – WHO எச்சரிக்கை!

அமெரிக்கா,இங்கிலாந்து,ஸ்பெயினில் உள்ள 1 முதல் 6 வரையிலான குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் கண்டறியப்பட்டு உள்ளது.மேலும் இது பொதுவாக சளியுடன் தொடர்புடைய ஒரு வகையான வைரஸ் ஆக இருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகளால் கூறப்படுகிறது.இந்நிலையில்,இங்கிலாந்தில் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் தொடர்பாக 74  வழக்குகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இதேபோன்று,ஸ்பெயினில் மூன்று வழக்குகள் மற்றும் அயர்லாந்தில் ஒரு சில வழக்குகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் WHO தெரிவித்துள்ளது.இதற்கிடையில்,கல்லீரலை தாக்கும் மர்ம நோய் தொடர்பான … Read more

மக்களே எச்சரிக்கை .., பூச்சிகளால் உருவாகும் அடுத்த தொற்றுநோய் – WHO எச்சரிக்கை..!

ஏற்கனவே கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் உள்ள பலரையும் வருத்தி வரும் நிலையில், தற்பொழுது புதிது புதிதாக நோய்கள் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஜிகா மற்றும் டெங்கு ஆகிய பூச்சிகளால் பரவக்கூடிய நோய் கிருமிகள் அடுத்த தொற்றுநோயாக உருவாக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதாவது வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதியில் வாழக்கூடிய 4 பில்லியன் மக்களுக்கு இதனால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது … Read more

12 பேர் உயிரிழப்பு – கொரோனாவும் இல்லை, டெங்குவும் இல்லை …!

கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு பாதிப்பு எதுவுமில்லாமலேயே உத்தர பிரதேச மாநிலத்தில் மர்மமான வைரஸ் தாக்குதலால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இன்னும் கொரோனாவின் தாக்கமே குறையாத நிலையில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில், … Read more

சீனாவில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று..!

சீனாவில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பம் ஆனது.  இதனையடுத்து உலக நாடுகளில் பரவியது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்று பலவகைகளில் உருமாற்றம் அடைந்து பல்வேறு நாடுகளை பாதித்து வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவி … Read more

கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு..!

கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் கடந்த சில நாட்களாக ஜிகா வைரஸ் ஏற்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் மூலமாக இந்த ஜிகா வைரஸ் பரவுகிறது. கொசு கடித்தவர்களுக்கு காய்ச்சல், மூட்டு … Read more

கேரளாவில் புதிதாக 3 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று..!-மொத்த எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு..!

கேரளாவில் புதிதாக 3 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினமும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் கடந்த சில நாட்களாக ஜிகா வைரஸ் ஏற்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் மூலமாக இந்த ஜிகா வைரஸ் பரவுகிறது. கொசு கடித்தவர்களுக்கு காய்ச்சல், மூட்டு வலி, … Read more