தடுப்பு வேலியில் பைக் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு..!

திருநெல்வேலி அருகே உள்ள நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்த பால்துரை என்பவர் அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். நேற்று பணி முடிந்தது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரின் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு வேலியில் மோதியதில் பலத்த காயமடைந்த பால்துரை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

author avatar
murugan