கடலூரில் வாலிபர் கழுத்தறுத்து கொலை..?

கடலூர் மாவட்டம் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் புது நகரில் வசித்து வருபவர் ரங்கசாமி இவருக்கு காமராஜ் என்ற 22 வயது மகன் உள்ளார் இந்நிலையில் காமராஜ் இரவு கம்மியம்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கிற்கு பின்புறம் ரவி மற்றும் தேவா போன்ற 6 நண்பர்களுடன் சேர்ந்து காமராஜ் மது குடித்துள்ளார் அதற்குப்பிறகு தேவாவின் மோட்டார் சைக்கிளில் காமராஜ், மற்றும் தேவா இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மேலும் அங்கிருந்த 5 நண்பர்களும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்றனர் இந்நிலையில் தேவாவும் காமராஜ் நகரில் வந்த போது மற்ற ஐந்து நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து காமராஜ் மற்றும் தேவாவை மறித்தனர் அப்பொழுது தேவா வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கியவுடன் 5 பேரும் சேர்ந்து தேவாவை சரமாரியாக வெட்டினர்.

மேலும் காமராஜையும் தாக்கி அவரை ஸ்ரீ ராமுலு நகர் பகுதிக்கு கொண்டு சென்றனர் மேலும் அப்போது காமராஜ் மார்பில் கத்தி அரிவாள் வெட்டு காயங்களும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் கிடைந்துள்ளார், மேலும் அப்பொழுது இந்த சம்பவத்தை அங்குள்ள காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்த காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காமராஜ் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த கொலை தொடர்பாக அந்த 5 நண்பர்களை சேர்ந்து பேரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி காமராஜை படுகொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

மேலும் இந்நிலையில் தப்பி ஓடியவர்களை பிடித்த பின்னரே கொலையின் பின்னணி என்னவென்று தெரியும் எனவும் கூறியுள்ளனர் மேலும் அவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.