YES வங்கி, NO வங்கியானது..! மோடியை விமர்சித்த ராகுல் காந்தி..!

தனியார் வங்கியான யெஸ் வங்கி  வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் யெஸ் வங்கி  நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
 
யெஸ் வங்கிகளை நிர்வகிக்க எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் YES வங்கி, NO வங்கியானது என  ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் மோடியும் அவரது கொள்கைகளும் இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.
author avatar
murugan